திமுக சார்பில் போட்டியிட்ட திருநங்கை வெற்றி..

நாமக்கல் மாவட்டத்தில் வார்டு உறுப்பினர் பதவிக்குப் போட்டியிட்ட திருநங்கை ஒருவர் வெற்றி பெற்றுள்ளார். இவரே, இந்திய அளவில் அங்கீகரிக்கப்பட்ட கட்சி சார்பாக உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்ற முதல் திருநங்கை ஆவார்.

தமிழ்நாடு முழுவதும் 27 மாவட்டங்களின் ஊரக உள்ளாட்சி பகுதிகளில் இரண்டு கட்டமாக உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்றது.

உள்ளாட்சித் தேர்தல் இரண்டு கட்டங்களாக நடைபெற்று முடிந்த நிலையில் இன்று வாக்குப் பதிவு நடைபெற்றுவருகிறது.

தி.மு.க கூட்டணியும், அ.தி.மு.க கூட்டணியும் பெருவாரியான பகுதிகளில் வெற்றி பெற்று வருகின்றன.

இந்த நிலையில், தி.மு.க சார்பில் நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு ஒன்றியம் 2-வது போட்டியிட்ட திருநங்கை ரியா வெற்றி பெற்றுள்ளார்.

அவரை எதிர்த்து போட்டியிட்ட வேட்பாளரை விட 950 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றிபெற்றுள்ளார்.

அவருக்கு தி.மு.க எம்.பி தமிழச்சி தங்கபாண்டியன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே