TNPSC குரூப் 4 தேர்வு இன்று நடைபெறுகிறது

தமிழகம் முழுவதும் 16 லட்சத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொள்ளும் குரூப்-4 தேர்வு இன்று நடைபெறுகிறது.

கிராம நிர்வாக அலுவலர், இடைநிலை உதவியாளர், வரிதண்டலர், தட்டச்சர் உள்ளிட்ட சுமார் 6491 காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான வேலை வாய்ப்பு அறிவிப்பு கடந்த ஜூன் மாதம் 14-ஆம் தேதி வெளியிடப்பட்டது.

இந்நிலையில் இன்று தமிழகம் முழுவதும் சுமார் 3000 மையங்களில் நடைபெறும் இத்தேர்வை 16 லட்சத்திற்கும் மேற்பட்டோர் எழுதுகின்றனர். காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை நடைபெறும் இத்தேர்வுக்கு, மாணவர்கள் அரை மணி நேரத்திற்கு முன்பாக வர வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும் செல்போன் உள்ளிட்ட எந்த மின்னணு சாதனங்களையும் தேர்வு நடைபெறும் அறைக்குள், தேர்வர்கள் எடுத்து வரக்கூடாது என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே