சென்னை: 6 மாதங்களுக்கு மேல் பென்ஷன் பணத்தை எடுக்காமல் இருந்தால் ஓய்வூதியம் நிறுத்தப்படும் என்று தமிழக அரசு அதிரடியாக அறிவித்துள்ளது.

பணி ஓய்வுக்கு பின்னர் ஓய்வு பெறுபவர்களுக்கு ஓய்வூதியம் வழங்கப்பட்டு வருகிறது. மாதந்தோறும் அந்த ஈவுத் தொகை வங்கியில் இருப்பு வைக்கப்படும்.

இந் நிலையில், தமிழக அரசு இப்போது ஒரு அதிரடி உத்தரவை வெளியிட்டுள்ளது. அதாவது 6 மாதங்களுக்கும் மேல் அந்த பென்ஷன் பணத்தை எடுக்காமல் வைத்து இருந்தால், அவர்களின் ஓய்வூதியம் நிறுத்தப்படும் என்று அறிவித்துள்ளது.

இது தொடர்பாக வெளியிடப்பட்ட சுற்றறிக்கையில் கூறப்பட்டு உள்ளதாவது: 6 மாதத்திற்கு மேல் ஓய்வூதியத்தை எடுக்காத நபர்களின் வங்கிக்கணக்கு விபரத்தை ஓய்வூதியம் வழங்கும் அமைப்புக்கு வங்கிகளே தெரிவிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக அரசின் இந்த அதிரடி உத்தரவு பென்ஷன் வாங்கும் அனைத்து தரப்பினரையும் பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கி இருக்கிறது. எனவே இந்த உத்தரவை வாபஸ் பெற வேண்டும் என்ற கோரிக்கையும் வலுத்துள்ளது.

AKR

Having 20 years experience in the field of Journalism in various positions.

AKR has 46 posts and counting. See all posts by AKR

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே