மலையாள மொழிபேசும் மக்கள் அனைவருக்கும் ஓணம் திருநாள் வாழ்த்துகள் – முதல்வர் பழனிசாமி

ஓணம் பண்டிகை ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் மாதத்தில் துவங்கி செப்டம்பர் மாதம் வரை 10 நாட்கள் கொண்டாடப்படுகிறது.

இந்த வருடம் கடந்த 22-ம் தேதி முதல் வரும் ஆகஸ்ட் 31-ம் தேதி வரை கொண்டாடப்படுகிறது.

இந்த ஓணம் பண்டிகை மலையாளிகளால் மிக சிறப்பாக கொண்டாடுகின்றனர்.

இந்நிலையில், தமிழக முதல்வர் ஓணம் பண்டிகை முன்னிட்டு வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளது.

அதில், திருவோணம் பண்டிகையை கொண்டாடும் மலையாள மொழி பேசும் மக்களுக்கு நல்வாழ்த்துகள்.

சமத்துவம், சகோதரத்துவத்தை வலியுறுத்தும் வகையில் சாதி, மத பேதமின்றி ஓணம் கொண்டாடும் அனைவருக்கும் வாழ்த்துக்கள் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

Anitha S

செய்தி ஒருங்கிணைப்பாளர்

Anitha S has 2821 posts and counting. See all posts by Anitha S

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே