காலை 11 மணி முதல் 3.30 மணி வரை யாரும் வெளியே செல்ல வேண்டாம் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மேலும், “தமிழகத்தில் வெப்பச் சலனம் காரணமாக அடுத்த 48 மணி நேரத்தில் கோவை, நீலகிரி, இராமநாதபுரம், விருதுநகர், தஞ்சை, திருவாரூர், நாகை, புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்களில் இடியுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் பலத்த காற்று மற்றும் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
ஏனைய மாவட்டங்களில் வறண்ட வானிலை இருக்கும். மதுரை, திண்டுக்கல், திருச்சி, கரூர், சேலம், தருமபுரி, வேலூர், திருத்தணி உள்ளிட்ட இடங்களில் வெப்பம் 40 டிகிரி அளவில் பதிவாக கூடும்” என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.