ஜம்மு- காஷ்மீர் மாநிலம் ஷோபியனின் அம்ஷிபோரா பகுதியில் மூன்று பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை செய்யப்பட்டனர்.
ஜம்மு- காஷ்மீர் மாநிலம் ஷோபியனின் அம்ஷிபோரா பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக வந்த தகவலை தொடர்ந்து அப்பகுதியை சுற்றி வளைத்த பாதுகாப்புப் படையினா் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனா்.
அப்போது அங்கு மறைந்திருந்த பயங்கரவாதிகள், பாதுகாப்புப் படையினரை நோக்கி துப்பாக்கிச்சூடு நடத்தினா்.
பாதுகாப்புப் படையினரும் பதிலடி தாக்குதலில் ஈடுபட்டனா்.
இந்த துப்பாக்கிச் சண்டையில் 3 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டுள்ளதாக பாதுகாப்பு மக்கள் தொடர்பு அதிகாரி ஸ்ரீநகரில் தெரிவித்தார்.
தொடர்ந்து தேடுதல் வேட்டையில் பாதுகாப்பு படையினர் ஈடுபட்டுள்ளனர்.