எல்லையில் பாக்.ராணுவம் பீரங்கி குண்டுகளால் தாக்குதல் – மக்கள் மூன்று பேர் பலி

காஷ்மீரில் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோடு பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல் நடத்தியதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று அப்பாவி பொது மக்கள் கொல்லப்பட்டனர்.

ஜம்மு காஷ்மீர் மாநிலம் பூஞ்ச் மாவட்டத்தில் உள்ள குல்பூர் பிரிவில் நேற்று இரவு 10.20 மணி அளவில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்கத் தொடங்கியது.

இதில் எல்லைப் பகுதியில் அமைந்துள்ள கிராமத்தைச் சேர்ந்த முகமது ரஃபீக் (58), அவரது மனைவி ரஃபியா (50), இவர்கள் மகன் இர்ஃபான் (15) பலியாகினர்.

இது தவிர மேலும் சிலர் படுகாயம் அடைந்தனர். அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

காஷ்மீர் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோடு பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் தொடர்ந்து அத்துமீறி தாக்குதல் நடத்தி வருகிறது. ராணுவத்தினர், பொது மக்கள் என்று பலரும் தங்கள் உயிரை இழந்து வருகின்றனர்.

Related Tags :

Anitha S

செய்தி ஒருங்கிணைப்பாளர்

Anitha S has 2821 posts and counting. See all posts by Anitha S

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே