திருச்சி அருகே ஆழ்துளை கிணற்றில் இரண்டரை வயது குழந்தை தவறி விழுந்த விவகாரம் தொடர்பாக நடிகர் விவேக் வீடியோ பதிவு ஒன்றை தனது ட்விட்டர் பதிவில் பதிவிட்டுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள வீடியோ பதிவில் ‘ஆழ்துளை கிணற்றில் குழந்தை விழுந்த சம்பவம் வேதனை அளிப்பதாக குறிப்பிட்டுள்ளார் இந்த பொறுப்பற்ற சமூகத்தின் மீது கோபப்பட வேண்டி உள்ளதாகவும்’ தெரிவித்துள்ளார். ‘அக்கறை இன்றி செயல்படுபவர்களுக்கு கடும் தண்டனை வழங்க வேண்டும்’ எனவும் நடிகர் விவேக் வலியுறுத்தியுள்ளார்.
- ஒன்றறை மணி நேரத்தில் மீட்க முடியும்” – தேசிய மீட்பு படையினர் நம்பிக்கை
- குழாயில் வீழ்ந்த குழந்தையை மீட்க நிலமிறங்கும் வீரர்களை வாழ்த்திக் கண்ணீரோடு கைதட்டுகிறேன் – வைரமுத்து