சீன அதிபருக்கு சிறுமுகை கைத்தறி சால்வையை பிரதமர் பரிசளிக்க உள்ளார்

சீன அதிபர் ஜீ ஜின்பிங்-கிற்கு அவரது உருவம் பொறித்த சிறுமுகை கைத்தறி சால்வையை பிரதமர் நரேந்திர மோடி பரிசளிக்க இருக்கிறார்.

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே உள்ள சிறுமுகையில் தயாரிக்கப்படும் கைத்தறி பட்டுக்கு பொது மக்களிடம் எப்போதும் வரவேற்பு அதிகரித்திருக்கிறது.

குறிப்பாக சிறுமுகை நெசவாளர்கள் கைத்தறி பட்டு மற்றும் சால்வைகளில் உருவப்படம் பதித்து அசத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் சீன அதிபர் ஜீ ஜின்பிங் உருவம் பொறித்த பட்டு சால்வையை ஸ்ரீ ராமலிங்க சவுடாம்பிகை கூட்டுறவு நெசவாளர் சங்கத்தினர் உருவாக்கியுள்ளனர்.

இன்று நடைபெறும் சந்திப்பில் பிரதமர் நரேந்திர மோடி சீன அதிபர் ஜீ ஜின்பிங்-கிற்கு அந்த சால்வையை பரிசளிக்க உள்ளார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே