பெண்களை மொட்டை அடித்து அரை நிர்வாணமாக்கி சிறுநீரை குடிக்க வைத்த கொடூரம்!

முசாபர்பூர் மாவட்டத்தில் உள்ள டாக்ரமா என்ற கிராமத்தில், அங்கு வந்த மூன்று பெண்களை மந்திரவாதிகள் என நினைத்த கிராமத்து கும்பல் ஒன்று, அவர்களுக்கு மொட்டையடித்து கடுமையாக தாக்கியுள்ளனர்.

பின்னர் அரை நிர்வாணமாக்கி அவர்களை சிறுநீரை குடிக்க வைத்து இருசக்கர வாகனத்தில் கிராமம் முழுவதும் ஊர்வலமாக அழைத்துச் சென்றுள்ளனர்.

இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இது மிகப்பெரிய குற்றம் என குறிப்பிட்டுள்ள மாவட்ட காவல்துறையினர், விசாரணையை துவங்கி 9 பேரை கைது செய்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.

மேலும் இது தொடர்பில் சிலரை கைது செய்ய நடவடிக்கை எடுத்து வரப்படுவதாகவும் போலிசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இச்சம்பவம் அம்மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Anitha S

செய்தி ஒருங்கிணைப்பாளர்

Anitha S has 2821 posts and counting. See all posts by Anitha S

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே