தட்டி பறிக்கும் வாரிசு நடிகர்கள் ?? மும்பை நடிகைகளுக்கு தெரியும் பாலிவுட்டில் என்ன நடக்கிறது என்று !!

கடந்த சில நாட்களாக நடிகர் சுஷாந்த் மறைவிற்குப் பிறகு பாலிவுட் பிரபலங்கள் பல திடுக்கிடும் தகவல்களை வெளியிட்டு வருகின்றனர். பாலிவுட் திரையுலக நடிகர்களின் வாரிசுகள் மட்டுமே ஜொலிக்க வாய்ப்புகள் கொடுக்கப்படுகின்றது. உண்மையான திறமைகள் உள்ள பலரை அவர்கள் உதாசீனப்படுத்தி ஓரம் கட்டி விடுகின்றனர் என பல நடிகர்கள் பிரபலங்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

பெரும்பாலும் தமிழ் – தெலுங்கு ஆகிய திரையுலகில் மும்பை நடிகைகளே அதிகம். பாலிவுட்டில் பெரிய குடும்பங்களை சேர்ந்த வாரிசுகளுக்கு மட்டும் வாய்ப்புகள் கொடுக்கப்படுகின்றது என்பதை அறிந்தார்களோ என்னவோ ? பாலிவுட்டில் அவர்களுக்கு அதிக வாய்ப்பு கிடைப்பதில்லை.

நடிகை ராகுல் பிரீத் சிங், காஜல் அகர்வால், நயன்தாரா போன்ற நடிகைகள் தென்னிந்திய சினிமாவில் அசைக்க முடியாத இடத்தில் பல ரசிகர்களின் ஆதரவை பெற்று உள்ளனர். மிகப் பெரிய ஸ்டார் நடிகை ஆகிவிட்ட பிறகு அவருக்கு பாலிவுட்டில் வாய்ப்பு கொடுக்கப் படுகிறது. ஆனாலும் வாரிசு நடிகைகளைப் போல் இல்லை. ஆலியா பட், சோனம் கபூர், சோனாக்ஷி சின்ஹா போன்ற நடிகைகள் பெண்களுக்கு முக்கிய துவம் உள்ள கதாபாத்திரங்களை தட்டி பெறுகின்றனர் என பரவலாக பேசப்படுகிறது.
பல திறமைகள் இருந்தும் இப்படி வாய்ப்புகள் மறுக்கப்படுவது வேதனைக்குரியது. கூடிய விரைவில் சாதாரண குடும்பத்தை சேர்ந்த நடிகர் நடிகைகளும் திறமையை நிரூபிக்க காலம் வெகு தொலைவில் இல்லை. ஏனென்றால் இப்போதைய ஓட்டிட்டு தளங்கள் வந்துவிட்டது சிறப்பான நடிப்பு மற்றும் இயக்கம் கொண்டுள்ள பல வெப் செரிஸ் வெற்றிபெற்றுள்ளது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே