ஃபேஸ்புக்கில் விலைப்பட்டியலுடன் சிறுமியின் புகைப்படத்தை பகிர்ந்த இளம்பெண்!

ஃபேஸ்புக்கில் சிறுமியின் புகைப்படத்தை பகிர்ந்து இழிவாகப் பதிவிட்ட இளம்பெண்ணை கைது செய்துள்ளது அகமதாபாத் சைபர்கிரைம்.

குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் வசிப்பவர் ராதா சிங் (32). இவர் தனது ஃபேஸ்புக் ஐடியில் இருந்து, ஒரு சிறுமியின் புகைப்படத்தை அவரது செல்போன் எண்ணுடன் பகிர்ந்து, ‘ரூ.2,500’ என்ற வாசகத்துடன் இழிவாகப் பதிவிட்டிருந்தார். மேலும் அந்த சிறுமியின் வாட்ஸ்-அப் எண்ணிற்கு ராதா சிங், சில அவதூறான மெசேஜ்களையும் அனுப்பியதாக தெரிகிறது. இதையடுத்து ராதா சிங் மீது சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரை தொடர்ந்து, அவரை அகமதாபாத் சைபர்கிரைம் போலீசார் கைது செய்தனர்.

விசாரணையில், முன்பு தான் டெல்லியில் வசித்து வந்ததாகவும், நான்கு ஆண்டுகளுக்கு முன்பு அகமதாபாத்திற்கு குடிபெயர்ந்ததாகவும் ராதா சிங் தெரிவித்தார். அகமதாபாத்தில் அந்த சிறுமியின் தந்தையுடன் தொடர்பு ஏற்பட்டு இருவரும் நட்பாக பழகி வந்துள்ளனர். அதன்பின் இருவருக்குமிடையில் தகராறு ஏற்பட்டு பிரிந்து விட்டனர். இதையடுத்து அவரை பழிவாங்கும் வகையில் அவரது மகளின் புகைப்படத்தை எடுத்து ஃபேஸ்புக்கில் ராதா சிங் அவதூறாகப் பதிவிட்டதாக போலீசார் தெரிவித்தனர். 

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே