அத்தியாவசிய பொருட்களின் கடைகள் காலை 6 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை மட்டுமே திறந்திருக்கும்

தமிழகத்தில் அத்தியாவசியப் பொருட்களான மளிகை மற்றும் காய்கறி போன்றவற்றை விற்பனை செய்யும் கடைகள் திறந்திருக்கும் நேரத்தை மேலும் குறைத்து தமிழக முதல்வர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

இதுவரை காலை 6 மணி முதல் பிற்பகல் 2.30 மணி வரை இயங்கி வந்த கடைகள், இனி காலை 6 மணி முதல் பகல் 1 மணி வரை மட்டுமே செயல்பட வேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து, ஏப்ரல் 5-ம் தேதி முதல் தமிழகத்தில் உள்ள அனைத்து அத்தியாவசிய பொருட்கள் விற்பனைக் கடைகளும் பகல் 1 மணி வரை மட்டுமே செயல்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து தமிழக முதல்வர் பழனிசாமி பிறப்பித்திருக்கும் உத்தரவில்,

தமிழகத்தில் கரோனா பரவலைத் தடுக்கும் வகையில், மக்கள் நடமாட்டத்தை மேலும் கட்டுப்படுத்த, அத்தியாவசிய பொருட்களை வாங்க காலை 6.00 மணி முதல் 2.30 மணி வரை அனுமதிக்கப்பட்டிருந்த கால அளவை நாளை ஞாயிற்றுக்கிழமை (5.4.2020) முதல் குறைத்து, காலை 6.00 மணி முதல் மதியம் 1.00 மணி வரை மட்டுமே அத்தியாவசிய பொருட்களை வாங்க அனுமதிக்கப்படும்.

இதை அனைத்து பொதுமக்களும் கடைபிடிக்க கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். 

விதிமுறைகளை மீறுபவர்கள் மீது சட்ட ரீதியாக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் முதல்வர் பழனிசாமி கூறியுள்ளார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே