அதிமுக சார்பில் போட்டியிட்ட அன்வர் ராஜா-வின் மகள் தோல்வி

ராமநாதபுரம் மண்டபம் ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு போட்டியிட்ட முன்னாள் எம்.பி அன்வர் ராஜா மகள் அதரியா தோல்வியடைந்தார்.

ஊராட்சி மன்ற தலைவர், ஊராட்சி மன்ற வார்டு உறுப்பினர், ஒன்றியக்குழு உறுப்பினர் மாவட்ட குழு உறுப்பினர் ஆகிய பதவிகளுக்கான 91,975 இடங்களுக்குத் தேர்தல் நடைபெற்றது.

இந்த தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணிக்குத் தொடங்கியது. ஒரு சில இடங்களில் தேர்தல் முடிவுகள் வெளியாகின.

ஆனால், பல இடங்களில் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் அதிமுக முன்னாள் எம்.பி அன்வர் ராஜா மகள் அதரியா ராமநாதபுரம் மண்டபம் ஒன்றியம் 2 வது வார்டில் கவுன்சிலர் பதவிக்கு போட்டியிட்டார்.

அதரியா வெற்றியடைவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவரை எதிர்த்து போட்டியிட்ட திமுக வேட்பாளர் சுப்பு லட்சுமியிடம் 1343 வாக்குகள் குறைவாக பெற்று தோல்வியை தழுவினார்.

ராவியத்துல் அதரியா டெபாசிட் இழந்துள்ளார். வெற்றி பெற்ற சுப்புலெட்சுமி மண்டபம் ஒன்றிய திமுக செயலாளர் ஜீவானந்தத்தின் மனைவியாவார்.

அன்வர் ராஜாவின் மகன் நாசர் அலி மண்டபம் ஒன்றிய உறுப்பினர் 6-வது வார்டில் போட்டியிட்டுள்ளார். இந்த வார்டில் வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே