நதிகள் இணைப்பது தொடர்பாக மத்திய ஜல்சக்தி அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத்துடன் இன்று காலை முதல்வர் பழனிசாமி ஆலோசனை மேற்கொண்டார்.
அந்த ஆலோசனை கூட்டத்தில், காவிரி கோதாவரி ஆறுகளை இணைப்பது குறித்து காணொளி வாயிலாக ஆலோசனை நடந்தது.
அப்போது, நடந்தாய் வாழி காவேரி திட்டத்தை செயல்படுத்த மத்திய அரசு அனுமதி தர வேண்டும் என முதல்வர் கோரிக்கை விடுத்துள்ளார்.
அதன் பிறகு பேசிய முதல்வர், தமிழகத்தில் விவசாயம் மட்டுமின்றி குடிநீருக்கும் காவிரி நீர் இன்றி அமையாதது என்றும் கோதாவரி-காவிரி, காவிரி-குண்டாறு இணைப்பு திட்டத்துக்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் நடந்தாய் வாழி காவேரி திட்டத்தை செயல்படுத்த அனுமதி தர வேண்டும் என்றும் கூறினார்.