தமிழகத்தில் சென்னையை தவிர பிற இடங்களில் டீ கடைகள் திறக்கலாம் – முதல்வர் பழனிசாமி

சென்னையைத் தவிர பிற இடங்களில் தேநீர் கடைகளைத் திறக்க தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

மேலும், அத்தியாவசியப் பொருட்கள் விற்பனை செய்யும் கடைகள் அனைத்தும் காலை 6 மணி முதல் இரவு 7 மணி வரை செயல்பட அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

  • அத்தியாவசிய கடைகள் காலை 6 மணி முதல் இரவு 7 மணி வரை திறக்க அனுமதி.
  • வரும் 11 ம் தேதி முதல் டீ கடைகள் இயங்கலாம்.
  • தேநீர் கடைகளில் நின்று , அமர்ந்தோ தேநீர் அருந்த அனுமதி கிடையாது.
  • காலை 6 மணி முதல் மாலை 7 மணி வரை பார்சல் சேவைக்கு மட்டும் அனுமதி.
  • நோய்க் கட்டுப்பாடு பகுதிகளை தவிர மற்ற இடங்களில் இயங்கலாம்.
  • நெடுஞ்சாலைகளில் உள்ள பெட்ரோல் பங்குகள் 24 மணி நேரமும் செயல்படலாம்.
  • சென்னையில் தனியார் நிறுவனங்கள் காலை 10.30 மணி முதல் மாலை 6 மணி வரை செயல்படலாம்.

Anitha S

செய்தி ஒருங்கிணைப்பாளர்

Anitha S has 2821 posts and counting. See all posts by Anitha S

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே