தொழில்நுட்பக் கோளாறு காரணமாக அவசரகால உதவி எண்ணான 100 ஐ அழைப்பதில் இடர்பாடு ஏற்பட்டுள்ளது.
பொதுத்துறை நிறுவனமான பி.எஸ்.என்.எல் -ல் ஏற்பட்டுள்ள தொழில்நுட்ப கோளாறு காரணமாக ஏர்டெல், வோடஃபோன், ஐடியா மற்றும் ஜியோ போன்ற சிம்களை பயன்படுத்தும் வாடிக்கையாளர்களின் கைப்பேசியிலிருந்து காவல் அவசர அழைப்பு எண் 100 மற்றும் 112 அழைப்புகளை பெற முடியாத சூழல் உருவாகியுள்ளது.
இதனால் அவசர அழைப்புகளுக்கு 044 – 46100100 மற்றும் 044 – 71200100 ஆகிய எண்களை தொடர்பு கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.