தமிழகத்தில் பொது முடக்க காலத்தில் இறுதிச் சடங்கில் 50 பேர் வரை பங்கேற்க தமிழக அரசு அனுமதியளித்துள்ளது.
கரோனா வைரஸ் நோய்த் தொற்று பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக நாடு முழுவதும் பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டு நீட்டிக்கப்பட்டு வருகின்றன.
இதனால், திருமண நிகழ்ச்சிகளில் 50 பேர் மற்றும் இறுதிச் சடங்கில் 20 பேர் மட்டும் பங்கேற்க வேண்டும் என்று கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தன.
இந்த நிலையில், தற்போது இறுதிச் சடங்கில் பங்கேற்பவர்களின் எண்ணிக்கையையும் 50 ஆக அதிகரித்து தமிழக அரசு அரசாணை பிறப்பித்துள்ளது.