உலகளவில் வானூர்தி துறையில் தலைசிறந்த 9 முன்னணி நிறுவனங்கள் தமிழகத்தில் முதலீடு செய்ய முதல்வர் பழனிசாமி அழைப்பு விடுத்துள்ளார்.
தமிழகத்தில் பொருளாதாரத்தை மேம்படுத்தும் பொருட்டு பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கபட்டு வருகிறது.
இந்நிலையில் தமிழக முதல்வர் உலக அளவில் சிறந்த 9 வானூர்தி நிறுவனங்களான ரோல்ஸ்ராய்ஸ், ஏர்பஸ்,போயிங் உள்ளிட்ட 9 நிறுவனங்களுக்கு தமிழக முதல்வர் கடிதம் எழுதியுள்ளார்.
கொரோனா பரவலால் இடம்பெயரும் நிறுவனங்களுக்கு முதல்வர் கடிதம் எழுதி வருகிறார்.
அதில் தமிழகத்தில் முதலீடு செய்ய வேண்டுமென நேரடியாக அழைப்பு விடுத்துள்ளார்.