சூர்யா 40 அப்டேட் கொடுத்த சன் பிக்சர்ஸ்

படப்பிடிப்புக்கு திரும்பியிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது – நடிகர் சூர்யா

பாண்டிராஜ் படத்தின் ஷூட்டிங்கில் நடிகர் சூர்யா இணைந்துள்ளார்.

சுதா கொங்கரா – சூர்யா கூட்டணியில் உருவான‘சூரரைப்போற்று’ திரைப்படம் ஓடிடி தளத்தில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. அதைத்தொடர்ந்து கவுதம் மேனன் இயக்கத்தில் ‘நவரசா’ என்ற ஆந்தாலஜியில் நடித்த சூர்யா பாண்டிராஜ் இயக்கத்தில் தனது 40-வது படத்தில் ஒப்பந்தமானார்.

இன்னும் பெயரிடப்படாத இந்தப் படம் தற்காலிகமாக ‘சூர்யா 40’ என்றே அழைக்கப்பட்டு வருகிறது. இந்தப் படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக ப்ரியங்கா அருள்மோகன் நடிக்கிறார். மேலும் நடிகர் சத்யராஜ், வினய், சரண்யா பொன்வண்ணன், இளவரசு, சுப்பு பஞ்சு, தேவதர்ஷினி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். டி.இமான் இந்தப் படத்துக்கு இசையமைப்பதன் மூலம் முதன் முறையாக சூர்யாவுடன் இணைந்து பணியாற்றுகிறார்.

சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு கடந்த பிப்ரவரி 15-ம் தேதி தொடங்கியது. அப்போது கொரோனா தொற்றிலிருந்து குணமாகி வீட்டில் இருந்ததால் அவர் கலந்து கொள்ளவில்லை. எனவே விரைவில் இந்தப் படத்தின் படப்பிடிப்பில் சூர்யா கலந்து கொள்வார் என படக்குழு தெரிவித்திருந்தது.

சூர்யா இல்லாமலேயே முதல்கட்ட படப்பிடிப்பை படக்குழு முடித்திருக்கும் நிலையில் இன்று அவர் ஷூட்டிங்கில் இணைந்திருப்பதாக சன் பிக்சர்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது. அதேபோல் நடிகர் சூர்யாவும் படப்பிடிப்புக்கு திரும்பியிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது என ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே