பள்ளிகளில் மாணவர் சேர்க்கை தொடர்பாக வரும் 10ம் தேதி முதல்வர் அறிவிப்பார் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
மேலும் கொரோனா குறைந்த பிறகே பள்ளிகள் திறப்பு குறித்து முடிவு எடுக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டிபாளையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அதில் பேசிய அவர் தற்காலிக ஆசிரியர்களுக்கு முறையாக ஊதியம் வழங்கப்பட்டு வருவதாக தெரிவித்துள்ளார்.