இன்று சென்செக்ஸ் 300 புள்ளிகளுக்கு மேல் வர்த்தகம்

இந்திய பங்குச்சந்தைகள் நேற்று நல்ல ஏற்றம் கண்ட நிலையில் இன்றும்(ஆக.,11) உயர்வுடன் துவங்கின. சென்செக்ஸ் 300 புள்ளிகளுக்கு மேல் வர்த்தகமானது.

வர்த்தக வாரத்தின் இரண்டாம் நாளில் வர்த்தக நேர துவக்கத்தில் சென்செக்ஸ் 342.50 புள்ளிகள் உயர்ந்து 38,524.58ஆகவும், தேசிய பங்குச்சந்தையின் நிப்டி 101.75 புள்ளிகள் உயர்ந்து 11,371.90ஆகவும் வர்த்தகமாகின.

அமெரிக்கா – சீனா இடையே இந்த வார இறுதியில் வர்த்தகம் தொடர்பான பேச்சுவார்த்தை நடைபெற இருப்பதாலும் அதன் மீதான எதிர்பார்ப்பு, ஆசிய பங்குச்சந்தைகளில் காணப்படும் ஏற்றம், வங்கி தொடர்பான பங்குகள், சன் பார்மா, பார்தி ஏர்டெல் உள்ளிட்ட நிறுவன பங்குகள் உயர்ந்து காணப்படுவதாலும், அந்நிய முதலீடு சற்று அதிகரிப்பு போன்ற காரணங்களால் இந்திய பங்குச்சந்தைகள் உயர்வுடன் வர்த்தகமாகி வருவதாக சந்தை வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.

ரூபாயின் மதிப்பும் உயர்வு அந்நிய செலாவணி சந்தையில் அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பும் 7 காசுகள் உயர்ந்து 74.82ஆக வரத்தகமானது.

கச்சா எண்ணெய் விலை சர்வதேச சந்தையில் ஒரு பேரல் கச்சா எண்ணெய் விலை 0.53 சதவீதம் உயர்ந்து 45.23 அமெரிக்க டாலராக விற்பனையானது.

Related Tags :

Anitha S

செய்தி ஒருங்கிணைப்பாளர்

Anitha S has 2821 posts and counting. See all posts by Anitha S

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே