ஸ்டெர்லைட் விவகாரத்தில் சென்னை உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து ஆலை நிர்வாகம் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

தூத்துக்குடி மாவட்டத்தில் நிறுவப்பட்ட ஸ்டெர்லைட் ஆலையை எதிர்த்து நடைபெற்ற போராட்டத்தில் 13 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

இந்த சம்பவம் பூதாகரமாக உருவெடுத்ததால் ஸ்டெர்லைட் ஆலைக்கு தமிழக அரசு சீல் வைத்தது. இதனை எதிர்த்து வேதாந்தா நிறுவனம் உயர்நீதிமன்றத்தில் வழக்குத்தொடர்ந்தது.

அந்த வழக்கின் தீர்ப்பு கடந்த சில நாட்களுக்கு முன்னர் வெளியானது. அப்போது, ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான தடை தொடரும் என அதிரடி தீர்ப்பு வழங்கப்பட்டது.

இந்த தீர்ப்பு மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றிருந்தாலும், ஸ்டெர்லைட் தரப்பில் எதிர்ப்பு கிளம்பியது.

உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்வோம் என ஸ்டெர்லைட் சிஇஓ தெரிவித்திருந்தார். 

இதனைத்தொடர்ந்து ஸ்டெர்லைட் எதிர்ப்பு இயக்கம், மதிமுக, தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த நிலையில் ஸ்டெர்லைட் ஆலையை மூடுவதற்கான தடை தொடரும் என்ற உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து வேதாந்தா நிறுவனம் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது.

இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Anitha S

செய்தி ஒருங்கிணைப்பாளர்

Anitha S has 2821 posts and counting. See all posts by Anitha S

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே