தைத்திருநாளை முன்னிட்டு அண்ணா, கருணாநிதி நினைவிடங்களில் ஸ்டாலின் மரியாதை..!!

பொங்கல் திருநாளை ஒட்டி, சென்னை மெரினா கடற்கரையில் அமைந்துள்ள கலைஞர் கருணாநிதி நினைவிடத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தினார்.

தொடர்ந்து அண்ணா நினைவிடத்திலும் அவர் மரியாதை செலுத்தினார்.

பின்னர் அண்ணா மற்றும் கருணாநிதி நினைவிடங்களில் பராமரிப்பு பணியில் ஈடுபட்டுள்ள பணியாளர்களுக்கு பொங்கல் பரிசுகளை ஸ்டாலின் வழங்கினார்.

முன்னதாக, ஆழ்வார்பேட்டையிலுள்ள இல்லத்தில் திமுக நிர்வாகிகள், தொண்டர்களை சந்தித்து பொங்கல் வாழ்த்துக்களை ஸ்டாலின் தெரிவித்துக் கொண்டார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே