மதுரையில் பயணிக்களுக்கான முதல் சிறப்பு ரயில் சேவை தொடங்கி உள்ளது.
மதுரையில் பயணிகளுக்கான முதல் சிறப்பு ரயில் சேவை தொடங்கி உள்ளது.
அதன்படி மதுரை டூ விழுப்புரம் சிறப்பு ரயில், 7 மணிக்கு மதுரையில் புறப்பட்டு, நண்பகல் 12 மணிக்கு விழுப்புரத்தை சென்று சேர உள்ளது.
சிறப்பு ரயிலுக்கான முன்பதிவு கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பே தொடங்கியது.
தற்போது இந்த ரயிலில், பயணிகள் பயணம் செய்வதற்கு முன் அவர்களிடம் இ பாஸ் இருந்தால் மட்டுமே அனுமதிக்கப்படுகிறார்கள்.
மதுரை ரயில் நிலையம் முன் சிறப்பு ரயிலில் பயணம் செய்யும் பயணிகள் சானிடைசரை கொண்டு சுத்தம் செய்த பின்னரே உள்ளே அனுமதிக்கப்படுகின்றனர்.
மேலும் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் எனவும் அறிவுறுத்தப்படுகின்றனர்.