அரசின் சிறப்பு விடுமுறை; தனியார் நிறுவனங்களுக்கு நேரடியாக பொருந்தாது

அரசின் சிறப்பு விடுமுறை அறிவிப்புகள் தனியார் நிறுவனங்களுக்கு நேரடியாக பொருந்தாது என உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் மறைவுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் கடந்த 2015 ஆம் ஆண்டு ஜூலை 30-ஆம் தேதி தமிழக அரசு பொது விடுமுறை அறிவித்தது.

அன்றைய தினம் கிருஷ்ணகிரியில் தனியார் ஆலையில் பணிக்கு வராத 47 ஊழியர்களுக்கு ஊதியம் வழங்குமாறு சேலம் தொழிலாளர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்த உத்தரவை எதிர்த்து சம்மந்தப்பட்ட நிறுவனம் தொடர்ந்த மேல்முறையீட்டை விசாரித்த உயர்நீதிமன்ற நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம், மாற்றுமுறை ஆவண சட்டப்படி அறிவிக்கப்படும் அரசு விடுமுறை தனியார் நிறுவனங்களுக்குப் பொருந்தாது எனத் தெளிவு படுத்தினார்.

ஊழியர்களுக்கு அன்றைய தினம் ஊதியம் பெற உரிமை இல்லை எனக்கூறி நீதிமன்ற உத்தரவை ரத்து செய்தும் உத்தரவிட்டார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே