அதிகாரியை செருப்பால் அடித்த பாஜக கட்சியை சேர்ந்த சோனாலி போகட் : வேடிக்கை பார்த்த போலீஸ்!!

டிக்டாக் பிரபலமும் பாஜக கட்சியை சேர்ந்தவருமான சோனாலி போகட் வேளாண் சந்தைக் குழுவின் உறுப்பினர் ஒருவரை செருப்பால் அடித்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சோனாலி போகட் கடந்த ஆண்டு ஹரியானாவில் நடந்த சட்டசபை தேர்தலில் போட்டியிட்டு தோற்றவர்.

வெள்ளிக்கிழமையான நேற்று விவசாயச் சந்தையை ஆய்வு செய்த இவர், அவரிடம் புகார் அளித்த விவசாயிகளின் புகார்களோடு வேளாண் உற்பத்தி சந்தைக் குழுவின் உறுப்பினர் சுல்தான் சிங்கை சந்திக்கச் சென்றார்.

அங்கு சென்று அவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட அவர் திடீரென அவரை தனது செருப்பால் அடித்தார்.

இதனையடுத்து இந்த வீடியோ சமூக வலைதளத்தில் வெளியாகி வைரலானது.

இது குறித்து சுல்தான்சிங் கூறும் போது “சோனாலி என்னிடம் நான் யாரென்று தெரிகிறதா எனக் கேட்டார். 

அதற்கு உங்களை எனக்குத் தெரியும். நீங்கள் ஆதம்பூர் தேர்தலில் போட்டியிட்டவர் எனக் கூறினேன்.

மேலும் நான் விவசாயிகளின் புகார்கள் குறித்த விவரங்களை வாங்கி வைத்துள்ளேன் என்றும் அது குறித்த நடவடிக்கைகள் விரைவில் எடுக்கப்படும் என்றேன்.

உடனே அவர், ஏன் ஆதம்பூர் தேர்தலில் என்னை எதிர்த்தாய் எனக் கேட்டார். அதற்கு நான் எனக்கு அங்கு குடும்பம் இல்லை என்றும் எப்போதோ நடந்ததை தற்போது ஏன் நீங்கள் பேசுகிறீர்கள் எனவும் கூறினேன்.

அதற்கு அவர் நீ என்னை துஷ்பிரயோகம் செய்து விட்டாய் என்றார்.

அதற்கு நான் உங்களை அப்படி செய்யவில்லை எனக் கூறிக் கொண்டு இருக்கும்போதே அவர் செருப்பால் அடிக்கத் தொடங்கி விட்டார் என்றார்.

அந்த வீடியோவில் போலீஸார் சம்பவத்தை வேடிக்கை பார்த்து வருவதும் பதிவாகி மேலும் பரபரப்பை கூட்டியுள்ளது.

இந்த சம்பவத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்த காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் சந்தீப் சிங் சுர்ஜேவாலா, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சோனாலி போகட் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த காவல் அதிகாரிகள் சுல்தான் சிங், சோனாலி போகட் மீதும் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

Related Tags :

Anitha S

செய்தி ஒருங்கிணைப்பாளர்

Anitha S has 2821 posts and counting. See all posts by Anitha S

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே