சாத்தூர் பட்டாசு ஆலை வெடி விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 14 ஆக உயர்வு..!!

சாத்தூர் அருகே பட்டாசு ஆலையில் பயங்கர வெடி விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் 14 தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளனர். 36 பேர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே உள்ள அச்சங்குளம் கிராமத்தில், மாரியம்மாள் பயர் ஒர்க்ஸ் என்னும் பட்டாசு ஆலை செயல்பட்டு வருகிறது.

இந்த ஆலையில் பனந்தால், அன்பில் நகர் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்தவர்கள் அதிகளவில் பணிபுரிந்து வந்தனர்.

இந்நிலையில் இன்று (பிப்.,12) எதிர்பாராத விதமாக வெடி விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே 14 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 36 படுகாயமடைந்துள்ளனர்.

இந்த விபத்து காரணமாக பட்டாசு ஆலையின் பல அறைகள் சேதமடைந்துள்ளது. இது தொடர்பாக உடனே போலீசாருக்கும், தீயணைப்பு துறையினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.

சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்புத்துறையினர் தீயை அணைக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர்.

மேலும், படுகாயமடைந்தவர்களை சிவகாசி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர்.

இதில், சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால் உயிரிழப்பு மேலும் அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே