சூரிய கிரகணத்தை தமிழகத்தில் எந்தெந்த பகுதிகளில் பார்க்கலாம் ??

இன்று காலை தொடங்கும் சூரிய கிரகணத்தை எந்தெந்த பகுதிகளில் இருந்து பார்க்கலாம் என்று இங்கே அறிந்து கொள்ளலாம்.

சூரியன், சந்திரன், பூமி ஆகியவை ஒரே நேர்க்கோட்டில் வருவதே சூரிய கிரகணம் என்று அழைக்கப்படும்.

இந்த சூழலில் பூமி மற்றும் சூரியனுக்கு நடுவே வரும் சந்திரன், சூரியனை பூமியில் இருந்து பார்க்க முடியாத படி மறைத்துக் கொள்ளும்.

அப்படியொரு நிகழ்வு இன்று நடக்கிறது.

காலை 8.07 மணிக்கு தொடங்கும் சூரிய கிரகணம் 11.16 மணி வரை நீடிக்கிறது.

இந்த கிரகணம் வளைய வடிவில் தோன்றும். எனவே இதனை நெருப்பு வளைய சூரிய கிரகணம் என்று அழைக்கின்றனர்.

தமிழகத்தில் குறிப்பிட்ட இடங்களில் மட்டும் இந்த அரிய காட்சியை காண முடியும்.

கோவை, ஈரோடு, திருப்பூர் ஆகிய மாவட்டங்களில் 93% தெளிவாக கிரகணத்தை காண முடியும்.

சென்னை, காஞ்சிபுரம், கன்னியாகுமரி, தூத்துக்குடி, திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களில் பகுதி அளவிலான சூரிய கிரகணத்தை காணலாம் என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

காங்கேயம், ஊட்டி, அவிநாசி, சென்னிமலை ஆகிய பகுதிகளில் 3 நிமிடங்கள் வரை கிரகணம் தெரியும்.

திண்டுக்கல்லில் 2 நிமிடம் 50 வினாடிகளும், சிவகங்கை மற்றும் காரைக்குடியில் 2 நிமிடங்களும் தெரியக்கூடும்.

கோவை, ஈரோட்டில் 1 நிமிடம் 24 வினாடிகள் வரை தெரியும். மதுரையில் 20 வினாடிகள் மட்டுமே தெரியும் என்று கூறுகின்றனர். சூரிய கிரகணம் ஆண்டுதோறும் ஏற்படலாம்.

ஆனால் இந்த வளைய வடிவ சூரிய கிரகணத்தை இனி 14 ஆண்டுகள் கழித்தே நம்மால் பார்க்க முடியும்.

இந்த கிரகணத்தை வெறும் கண்களால் பார்க்கக் கூடாது என்று விஞ்ஞானிகள் அறிவுறுத்துகின்றனர்.

சூரிய ஒளியின் அளவை கட்டுப்படுத்தும் சூரியக் கண்ணாடிகள் பயன்படுத்தி பார்க்கலாம்.

இந்த அரிய நிகழ்வை காண சென்னை பிர்லா கோளரங்கம், அறிவியல் மையங்கள் சார்பில் பிரத்யேக ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே