தமிழகத்தில் இதுவரை 7000 பதற்றமான வாக்குச்சாவடிகள் கண்டறியப்பட்டுள்ளது – சத்யபிரதா சாஹு

தமிழகத்தில் 7 ஆயிரம் வாக்குச்சாவடிகள் பதற்றமானவை என தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார்‍.

சட்டமன்ற தேர்தலையொட்டி கடலூர் மாவட்டத்தில் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்திய பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய அவர், பதற்றமான வாக்குச்சாவடிகளில் கூடுதல் பாதுகாப்பு அளிக்கப்படும் என்றார்‍.

இதுவரை தமிழகத்தில் 21 லட்சத்திற்கும் மேற்பட்ட இளம் வாக்காளர்கள் சேர்க்கப்பட்டுள்ளதாக அப்போது அவர் கூறினார்‍.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே