மூணாறு நிலச்சரிவில் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே மல்லி கிராமத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேர் உயிரிழப்பு!

கேரள மாநிலம் மூணாறு பகுதியில் உள்ள பெட்டி முடி பகுதியில் உள்ள கண்ணன் தேவன் டீ எஸ்டேட் தேயிலைத் தோட்டத்தில் வேலை பார்த்த தொழிலாளர்கள் குடியிருப்பில் நேற்று இரவு பயங்கரமான நிலச்சரிவு ஏற்பட்டது.

இதில் அப்பகுதியிலிருந்த 23 வீடுகள் முழுமையாக சேதமடைந்த நிலையில் 80க்கும் மேற்பட்டோர் மண்ணில் புதைந்தனர்.

இதுவரை 14 பேர் உயிருடன் மீட்கப்பட்டுள்ள நிலையில் 43 பேர் உயிரிழந்தனர்.

மீதமுள்ளவர்களை தேடும் பணி தீவிரமாக நடைபெற்றுவருகிறது.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறை தீயணைப்பு துறை மற்றும் வனத்துறை அதிகாரிகள் மீட்புப்பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

மீட்புப்பணிக்கு நடுவில் கடுமையான மழை பெய்துவருவதால் மீட்பு பணியில் தொய்வு ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் மூணாறில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே மல்லி கிராமத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேர் உயிரிழந்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

Related Tags :

Anitha S

செய்தி ஒருங்கிணைப்பாளர்

Anitha S has 2821 posts and counting. See all posts by Anitha S

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே