பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியத்துக்கு கொரோனா தொற்று உறுதி..!!

பிரபல பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியத்துக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இவர், சென்னை சூளைமேட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இது குறித்து தனது பேஸ்புக் பக்கத்தில் வீடியோ பதிவிட்டிருக்கும் எஸ்.பி.பாலசுப்ரமணியம், “லேசான அறிகுறிகள் இருந்ததால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறேன்.

காய்ச்சல், சளி பிரச்னை குறைந்திருக்கிறது. வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொள்ள மருத்துவர்கள் அறிவுறுத்தினர்.

ஆனால் தற்போதைய சூழ்நிலையில் மருத்துவமனையில் இருந்து சிகிச்சை பெறுவதே நல்லது என்பதால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

Preethi

செய்தி தொகுப்பாளர்

Preethi has 289 posts and counting. See all posts by Preethi

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே