இந்தியா – அமெரிக்கா இடையே பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு துறைகளில் அடிப்படை தகவல் பரிமாற்றம் ஒத்துழைப்பு உள்பட 5 முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன.

இந்திய, அமெரிக்க வெளியுறவுத்துறை மற்றும் பாதுகாப்புத்துறை மந்திரிகள் இடையே கடந்த 2018ஆம் முதல் ஆண்டுதோறும் நேரடி பேச்சுவார்த்தை (2+2 பேச்சுவார்த்தை) நடந்து வருகிறது.

அவ்வகையில் இந்த ஆண்டுக்கான 2+2 பேச்சுவார்த்தை டெல்லியில் நடைபெற்றது.

அமெரிக்க வெளியுறவுத்துறை மற்றும் பாதுகாப்புத்துறை அமைச்சர்களுடன் இந்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர்.

பேச்சுவார்த்தைக்கு பின், இந்தியா – அமெரிக்கா இடையே அடிப்படை பரிமாற்றம், ஒத்துழைப்பு உள்பட 5 முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தானது.

இதன் மூலம் ராணுவ ரீதியிலான பல்வேறு தகவல்கள், தொழில்நுட்ப தகவல்களை பகிர சம்பதம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக அமெரிக்க ராணுவ தரவுகளை இந்தியாவுக்கு வழங்க அமெரிக்க ஒப்புதல் அளித்துள்ளது. இந்த ஒப்பந்தம் சீனா,பாகிஸ்தான் நாடுகளின் நடவடிக்கைகளை கண்காணிக்க இந்தியாவுக்கு உதவியாக இருக்கும்.

மேலும், ராணுவ உபகரணங்கள் வழங்குதல், இரு நாடுகளும் இணைந்து ராணுவ, கடல்பரப்பு, வான் பரப்பு உள்ளிட்ட விவகாரங்களில் இணைந்து செயல்படுதல் மற்றும் அது தொடர்பான தகவல்களை பகிர்தல் என பல்வேறு முக்கிய ஒப்பந்தங்களில் கையெழுத்தாகியுள்ளன.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே