கொரோனா பாதித்த பெண்ணுக்கு பாலியல் வன்கொடுமை; கொரோனா வார்டில் அட்டூழியம்

கொரோனாவால் பாதிக்கப்பட்ட பெண்ணை டாக்டர் ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் நொய்டாவில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

நொய்டாவில் கொரோனா பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்தார் 20 வயது இளம்பெண்.

அதே, மருத்துவமனையில் டாக்டர் ஒருவரும் கொரோனா பாதிக்கப்பட்டு சிகிச்சைக்கு அட்மிட் ஆனார்.

இந்நிலையில், ஆண்கள் தனியாகவும் பெண்கள் தனியாகவும் என தனி தனி வார்டுகளில் தனிமைப்படுத்தப் பட்டிருந்தார்கள்.

ஆனால், திடீரென்று இளம்பெண் தனிமைப்படுத்தப் பட்டிருந்த அறையில் நுழைந்த கொரோனா பாதிக்கப்பட்ட டாக்டர், 20 வயது இளம் பெண்ணிடம் பாலியல் ரீதியாக அத்துமீறியிருக்கிறார்.

அதிர்ச்சியடைந்த, இளம்பெண் அலறித்துடிக்க, அக்கம்பக்கத்து நோயாளிகள் ஓடிவந்து காப்பாற்றியிருக்கிறார்கள்.

இதுகுறித்து, பாலியல் வக்கிரம் கொண்ட டாக்டர்மீது வழக்குப்பதிவு செய்தது நொய்டா காவல்துறை.

இதுகுறித்து, நொய்டா கூடுதல் கமிஷனர் ரன்விஜய் சிங் கூறும்போது, எங்களுக்கு தகவல் கிடைத்ததுமே பாதிக்கப்பட்ட பெண்ணின் புகாரைப் பெற்று வழக்குப்பதிவு செய்துவிட்டோம்.

மருத்துவமனையின் ஒரு பகுதிகளில் பாதுகாப்பு தன்மை இல்லாததாக உள்ளது.

பாதுகாப்பான விதிமுறைகளுடன் நோயாளிகள் ஏன் தனிமைப்படுத்தப்படவில்லை? என்பது குறித்தும் விசாரணை செய்துவருகிறோம் என்றார்.

கொரோனா சூழலிலும்கூட டாக்டர் ஒருவர், இளம்பெண்ணுடன் அத்துமீறியது அப்பகுதி மக்களை அச்சத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

ஆனால், சிகிச்சை அளித்த டாக்டர், நோயாளியிடம் அத்துமீறவில்லை.

கொரோனா பாதிக்கப்பட்டு சிகிச்சைக்கு வந்த நோயாளிதான் இன்னொரு நோயாளிடம் அத்துமீறியிருக்கிறார். அதனால், அச்சப்படவேண்டாம் என்று வருத்தம் தெரிவித்து விளக்கம் அளித்திருக்கிறார்கள் மருத்துவர்கள்.

Related Tags :

Anitha S

செய்தி ஒருங்கிணைப்பாளர்

Anitha S has 2821 posts and counting. See all posts by Anitha S

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே