இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தா.பாண்டியன் மருத்துவமனையில் அனுமதி..!!

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தா.பாண்டியன் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

சிறுநீரக பாதிப்பு மற்றும் ரத்த அழுத்தம் காரணமாக அவர் நேற்று சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. வெண்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை பெற்றும் அவரது உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

சிறுநீர பிரச்சனையினால் கடந்த 10 ஆண்டுகளாக அவருக்கு டயாலிஸ் சிகிச்சை நடைபெற்று வருகிறது. நேற்று திடீரென்று சிறுநீரக பாதிப்பு அதிகமானது.

மேலும், அவரது உடல்நிலை மிகவும் மோசமாக இருந்ததால் ராஜீவ்காந்தி மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டார்.

சிறுநீரகம் மற்றும் ரத்தம் அழுத்தம் தொடர்பான சிகிச்சைகள் அளித்தும் இன்று அவரது உடல்நி கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே