கேரளா, மகாராஷ்டிராவில் இருந்து வந்தால் 7 நாள் தனிமை- தமிழக அரசு

கேரளா, மகாராஷ்டிராவில் இருந்து வந்தால் 7நாள் தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டுமென தமிழக அரசு அறிவித்துள்ளது

இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணையில், கேரளா, மகாராஷ்டிராவில் இருந்து தமிழகம் வருவோர் கட்டாயம் 7 நாள் வீட்டில் தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும். கொரோனா அறிகுறி தென்பட்டால் பரிசோதனை செய்ய வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளது. கேரளா, மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்கள் மற்றும் சில நாடுகளில் கொரோனா அதிகரிப்பால் இந்த நடவடிக்கை எடுத்துள்ளது தமிழக அரசு.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே