பொறியியல் மாணவர்களுக்கான செமஸ்டர் தேர்வுகள் தள்ளிவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அண்ணா பல்கலைக்கழகத்தில் இறுதி வருட மாணவர்களுக்கு மட்டுமே வரும் 14 ஆம் தேதி தேர்வு நடைபெறும் என்றும்; இறுதி வருடம் பயின்று வந்த மாணவர்களுக்கான தேர்வுகள் முடிந்த பின்னரே, பிற வருட மாணவர்களுக்கான தேர்வு தேதிகள் அறிவிக்கப்படும் என்றும் அண்ணா பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.

மேலும், மாணவர்களுக்கான தேர்வு தேதிகள் குறித்த அறிவிப்புக்கள் இணையத்தளத்தில் வெளியிடப்படும் என்றும் அண்ணா பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.

மாணவர்கள் தேர்வுகளுக்கு உரிய முறையில் தயாராக இருக்குமாறும் பல்கலைக்கழகம் அறிவுறுத்தியுள்ளது.

அண்ணா பல்கலைக்கழகம் சார்பாக கொரோனா சமயத்தில் மாணவர்களுக்கான தேர்வுகள் இணையதளம் வாயிலாக மிகுந்த கட்டுப்பாடுடன் நடைபெற்று முடிந்த நிலையில், இந்த வருடத்திற்கான தேர்வுகளை நடத்த தொடர்ந்து ஆயத்தமாகி வருவது குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே