புதுச்சேரியில் (ஃபுளூ) காய்ச்சல் வேகமாகப் பரவி வருவதால் 1 முதல் 8ம் வகுப்பு வரை அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு நாளை முதல் ஒரு வாரத்திற்கு விடுமுறை அளித்து கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

புதுச்சேரியில் கடந்த சில நாட்களாகச் சிறியவர், முதல் பெரியவர் வரை அனைவருக்கும் சளி, காய்ச்சலால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதனால் பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது. இதனிடையே புதுச்சேரியில் கடந்த 10 நாட்களாக மருத்துவமனைக்கு வரும் 50 சதவீத குழந்தைகளுக்கு காய்ச்சல், இருமல், சளி உள்ளிட்ட அறிகுறிகளுடன் பாதிக்கப்பட்டு வருவதாகவும் தொடர்ந்து காணப்பட்டது.

குழந்தைகளுக்கு ஏற்படும் காய்ச்சலை கட்டுப்படுத்த புதுச்சேரியில் 1 முதல் 8ஆம் வகுப்பு வரை பள்ளி மாணவர்களுக்கு விடுமுறை அளிக்க வேண்டுமென சுகாதாரத்துறை இயக்குநர், புதுச்சேரி கல்வித்துறை இயக்குநருக்கு பரிந்துரை கடிதம் எழுதியிருந்தார். இந்நிலையில் சுகாதாரத்துறை அறிவுறுத்தலை ஏற்று, நாளை 17.09.2022 முதல் வரும் 25.09.2022 ஆம் தேதி வரை புதுச்சேரி மற்றும் காரைக்காலில் 1 முதல் 8 ஆம் வகுப்பு வரை உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக கல்வித்துறை அறிவித்துள்ளது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே