சாத்தான்குளம் வழக்கில் போலீசார்களிடம் விசாரணை நடத்திய குழுவில் இருந்த சிபிஐ அதிகாரிகள் 2 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது.
தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளத்தில், ஜூன் 19ல் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட வியாபாரி ஜெயராஜ், 60; மகன் பெனிக்ஸ், 31 ஆகியோர், போலீஸ் தாக்குதலில் இறந்தனர்.
இது தொடர்பாக, ‘சஸ்பெண்ட்’ செய்யப்பட்ட இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர், எஸ்.ஐ.,க்கள் பாலகிருஷ்ணன், ரகுகணேஷ், போலீஸ்காரர்கள் என, 10 போலீசார் கைது செய்யப்பட்டனர்.
இந்த வழக்கை தற்போது, சி.பி.ஐ., அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.
இந்நிலையில், போலீசாரிடம் விசாரணை நடத்திய குழுவில் இருந்த சிபிஐ அதிகாரிகள் 2 பேருக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டதால், அவர்களுக்கு கொரோனா சோதனை நடத்தப்பட்டது.
இதில், இருவருக்கும் நேற்று முன்தினம் (ஜூலை 22) தொற்று உறுதியானதால், மற்ற சிபிஐ அதிகாரிகளுக்கும் கொரோனா பரிசோதனை நடத்த முடிவு செய்யப்பட்டது.
இந்நிலையில், விசாரணை குழுவில் உள்ள மேலும் 2 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.
இதனையடுத்து தொற்று பாதித்த இருவரும் மதுரை ரயில்வே மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.