தமிழ்நாட்டில் இன்று 494 பேருக்கு கொரோனா..; 4 பேர் உயிரிழப்பு..!!

தமிழகத்தில் புதிதாக 494 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது இன்று (வியாழக்கிழமை) உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதைத் தொடர்ந்து, தமிழகத்தில் மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 8,40,360 ஆக உயர்ந்துள்ளது.

அதிகபட்சமாக சென்னையில் 149 பேருக்கு கரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

கடந்த 24 மணிநேரத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வந்த 4 பேர் பலியாகியுள்ளனர்.

இதைத் தொடர்ந்து, மொத்த பலி எண்ணிக்கை 12,375 ஆக உயர்ந்துள்ளது.

மேலும் 517 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை மொத்தம் 8,23,518 பேர் நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர். தற்போது மருத்துவமனையில் 4,467 பேர் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே