சாத்தான்குளம் வழக்கில் சிறையில் இருக்கும் சிறப்பு காவல் ஆய்வாளர் பால்துரைக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய சம்பவம் சாத்தான்குளம் தந்தை, மகன் உயிரிழந்த சம்பவம்.
இது தொடர்பாக சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.
பின்னர் வழக்கு சிபிஐயிடம் ஒப்படைக்கப்பட்டது.
இதையடுத்து சிபிஐ குழுவினர் பாதிக்கப்பட்ட ஜெயராஜ் குடும்பத்தினர், நண்பர்கள், அருகில் வசிப்பவர்கள் என பலரிடம் விசாரணை நடத்தினர்.
செல்போன் கடை உள்ளிட்ட பல இடங்களிலும் அவர்கள் விசாரணையில் இறங்கினர். வழக்கு தொடர்பாக கைதான காவலர்களில் 3 பேரை காவலில் எடுத்து விசாரணை நடத்தினர்.
சில நாட்களுக்கு முன்பு விசாரணை நடத்திய குழுவில் இருந்த 2 சிபிஐ அதிகாரிகளுக்கு கொரோனா உறுதியானது. இப்போது மேலும் 2 சிபிஐ அதிகாரிகள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது.
இந் நிலையில், சிறப்பு காவல் ஆய்வாளர் பால்துரைக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.