#BREAKING : சாத்தான்குளம் வியாபாரிகள் உடல்கள் உறவினர்களிடம் ஒப்படைப்பு!

சாத்தான்குளத்தில் போலீஸ் காவலில் உயிரிழந்த தந்தை, மகன் உடல்களை உறவினர்கள் பெற்றுக் கொண்டனர்.

அம்மாவின் உடல்நிலை சரியில்லாமல் இருப்பதால் தந்தை, சகோதரன் உடல்களை பெறுகிறோம் என மகள் பெர்சி கூறியுள்ளார்.

உயர் நீதிமன்ற கிளை நேரடியாக விசாரிப்பதால் நீதி கிடைக்கும் எங்களுக்கு நம்பிக்கை உள்ளது.

தந்தை, சகோதரன் மீது படிந்துள்ள கைரேகை, தடயம் மூலம் குற்றவாளிகளை தண்டிக்க வேண்டும் என தெரிவித்தார்.

Anitha S

செய்தி ஒருங்கிணைப்பாளர்

Anitha S has 2821 posts and counting. See all posts by Anitha S

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே