அதிமுக தோல்வி அடைந்ததற்கு சசிகலா மற்றும் அவரது குடும்பத்தினரே காரணம் – கே.சி.வீரமணி

கடந்த 1996 மற்றும் 2006ம் ஆண்டுகளில் நடைபெற்ற தேர்தலில் அதிமுக தோல்வி அடைந்ததற்கு சசிகலா மற்றும் அவரது குடும்பத்தினரே காரணம் என, அமைச்சர் வீரமணி குற்றம்சாட்டியுள்ளார். 

ஆற்காடு அடுத்த கலவையில் அதிமுக சார்பாக கலவையை தனி தாலுக்காவாக அறிவித்த தமிழக அரசுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் முன்னாள் தமிழக முதல்வர் எம்.ஜி.ஆரின் பிறந்த நாள் விழா பொது கூட்டம் நடைப்பெற்றது.

இந்த நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் கே.சி.வீரமணி, அப்போது பேசிய அமைச்சர் வீரமணி, எம்.ஜி.ஆர் கட்சி தொடங்கிய போது 100 நாட்கள் கூட நடத்த முடியாது என கூறிய நிலையில் 48 ஆண்டுகளாக வெற்றிகரமாக செயல்பட்டு வருவதாகவும்; அதில் 30 ஆண்டுகள் தமிழகத்தின் ஆட்சி பொருப்பில் அதிமுக அரசு இருந்ததாக தெரிவித்தார். 

மேலும் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா கஷ்டப்பட்டு சம்பாதித்த அனைத்து சொத்துக்களையும் சசிகலா குடும்பத்தினர் தங்களுடைய சொத்தாக ஆக்கி கொண்டனர் என தெரிவித்த அமைச்சர், ஜெயலலிதாவின் வீட்டையே தன்னுடைய வீடு என அவர்கள் கூறுவதாக குற்றஞ்சாட்டினார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே