வழக்கறிஞர்களுக்கு மாதம் ரூ.3 ஆயிரம் – முதல்வர் பழனிசாமி அறிவிப்பு..!!

தமிழகத்தில் இளம் வழக்கறிஞர்களுக்கு மாதம் ரூ.3000 வழங்கும் திட்டத்தை முதல்வர் பழனிசாமி தொடங்கி வைத்தார்.

சட்டப்படிப்பு படித்து விட்டு கல்லூரியில் இருந்து வெளிவரும் வழக்கறிஞர்கள் முதலில் பார் கவுன்சிலில் நிரந்தர பதிவு சான்றிதழ் பெற வேண்டும்.

இதற்காக அவர்கள் தேசிய அளவிலான வழக்கறிஞர்கள் குழுமத்தில் தேர்ச்சி பெற வேண்டிய கட்டாயம் உள்ளது. பின்னர் இவர்கள் மூத்த வழக்கறிஞர்கள் இடம் 2 அல்லது 3 ஆண்டுகள் பயிற்சி பெற வேண்டும்.

இதனால் ஏழ்மையான அல்லது கிராமப்புற மாணவர்கள் சட்டப் படிப்பு படித்துவிட்டு பணியாற்றுவதற்கு குறைந்தபட்சம் 4 அல்லது 5 ஆண்டுகள் ஆகின்றன.

இதனால் அவர்கள் வறுமையோடு வலம் வரும் சூழல் ஏற்படுகிறது.

இந்நிலையில் இளம் வழக்கறிஞர்களுக்கு உதவி செய்யும் நோக்கில் தமிழக அரசு புதிய திட்டம் ஒன்றை அமல்படுத்தியுள்ளது.

இதன் மூலம் தமிழகத்தில் இளம் வழக்கறிஞர்களுக்கு மாதம் ரூ.3000 வழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்தார் முதல்வர் பழனிசாமி.

தலைமைச் செயலகத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார். இது அரசு சட்டக் கல்லூரிகளில் படித்த 30 வயதுக்குள் இருக்கும் வழக்கறிஞர்களுக்கு மட்டுமே பொருந்தும்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே