50 காவலர்கள் குடும்பத்துக்கு தலா ரூ.3 லட்சம் நிவாரண நிதி – முதல்வர் பழனிசாமி உத்தரவு..!!

விபத்து மற்றும் உடல்நலக் குறைவால் உயிரிழந்த 50 காவலர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.3 லட்சம் நிதி அறிவித்து முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், விபத்து மற்றும் உடல்நலக்குறைவால் உயிரிழந்த காவலர்கள் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன்.

இவ்வாறு உயிரிழந்த காவலர்களின் குடும்பங்களுக்கு முதல்வர் நிவாரண நிதியிலிருந்து இழப்பீடு வழங்கப்படும்.

அந்தவகையில் விபத்து மற்றும் உடல்நலக் குறைவால் உயிரிழந்த 50 காவலர்களின் குடும்பங்களுக்கு முதல்வர் நிவாரண நிதியிலிருந்து தலா ரூ.3 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே