405 நாட்களுக்கு பிறகு களத்திற்கு திரும்பிய ரோஜர் பெடரர்! கத்தார் ஓப்பனில் முதல் வெற்றி

டென்னிஸ் உலகின் ஆகச்சிறந்த வீரர்களில் ஒருவர் சுவிட்சர்லாந்து நாட்டின் ரோஜர் பெடரர். 39 வயதான அவர் கடந்த 2020 இல் ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற ஆஸ்திரேலியா ஓப்பன் தொடரில் பங்கேற்றிருந்தார். அதன் பிறகு காயத்தினால் அவதிப்பட்ட அவர் அறுவை சிகிச்சையும் செய்து கொண்டார். 

அதனால் அமெரிக்க ஓப்பன், பிரெஞ்சு ஓப்பன், ஆஸ்திரேலியா ஓப்பன் (2021) தொடர்களை மிஸ் செய்தார். 

இந்நிலையில், காயத்திலிருந்து மீண்ட அவர் சுமார் 405 நாட்களுக்கு பிறகு கத்தார் ஓப்பன் தொடரில் விளையாடும் முடிவோடு டென்னிஸ் கோர்ட்டுக்கு, தனது ரேக்கட்டுடன் திரும்பியிருந்தார்.  

பிரிட்டிஷ் வீரரான டான் எவான்ஸை 7-6 (8), 3-6, 7-5 என்ற செட் கணக்கில் வீழத்தில் வெற்றிபெற்றுள்ளார் பெடரர். இந்த வெற்றி கடுமையானதாக அவருக்கு இருந்தது. “களத்திற்கு திரும்பியதில் மகிழ்ச்சி” என தெரிவித்துள்ளார் அவர்.  

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே