தூத்துக்குடி மாவட்டத்திற்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை..!!

தூத்துக்குடி மாவட்டத்தில் காலை 8.30 மணி வரை மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுத்துள்ளது.

தூத்துக்குடி மாவட்டத்தில் நாளை காலை 8.30 மணி வரை மிககனமழை முதல் அதிகனமழை வரை பெய்ய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதில் குறைந்தபட்சம் 21 செ.மீ வரை பதிவாகும் என கூறிய வானிலை ஆய்வு மையம், அதிகனமழை பெய்யும் காரணமாக தூத்துக்குடிக்கு இந்திய வானிலை ஆய்வு மையத்தின் சார்பில் ரெட் அலர்ட் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

தூத்துக்குடியில் இன்று காலை முதல் மழை பெய்து வருகிறது. இதில் அதிகபட்சமாக துறைமுகத்தில் 17 செ.மீ மழை பதிவாகியுள்ளது, குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே