பொதுமுடக்கம் நீட்டிக்கப்படுமா…? மே 30ஆம் தேதி முடிவு

ஊரடங்கை நீட்டிப்பதா? வேண்டாமா? என வரும் 30 ம் தேதி முடிவு எடுக்கப்படும் என்ற தகவல் வெளியாகி உள்ளது.

சென்னையில் இன்று முதல்வர் பழனிசாமி மருத்துவ நிபுணர் குழுவினருடன் நடந்த ஆலோசனையில் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக தெரிகிறது.

சென்னையில் எந்த தளர்வும் அளிக்கப்படக்கூடாது என மருத்துவ நிபுணர்குழு தெரிவித்துள்ளதாக தெரிகிறது.

கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் செயல்படுத்த வேண்டிய புதிய உத்திகள் கடைபிடிக்க வேண்டும்.

சென்னையில் சிறப்பு நடவடிக்கைள் எடுக்கவும், தேவைக்கேற்ப மருத்துவ உபகரணங்கள், கட்டமைப்பு வசதிகளை அதிகப்படுத்தவும் மருத்துவ குழுவினருக்கு முதல்வர் பழனிசாமி அறிவுறுத்தியதாக தெரிகிறது.

இந்நிலையில் ஊரடங்கு நீட்டிக்கப்படுமா என்பது குறித்து மே.30 அன்று முடிவு எடுக்கப்படும் என்ற தகவல் வெளியாகி உள்ளது.

Related Tags :

Anitha S

செய்தி ஒருங்கிணைப்பாளர்

Anitha S has 2821 posts and counting. See all posts by Anitha S

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே