“அருவா” படத்தில் சூர்யாவுடன் ஜோடி சேரும் ராஷிகண்ணா!

“அருவா”  திரைப்படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக நடிப்பதை நடிகை ராஷிகண்ணா உறுதிப்படுத்தியுள்ளார்.

சூர்யாவின் 39-வது படத்தை விஸ்வாசம் பட இயக்குநர் சிவா இயக்குவதாக கடந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் அறிவிப்பு வெளியானது.

ஆனால் சிவா ரஜினிகாந்தின் அண்ணாத்த பட வேலைகளில் பிஸியானார்.

அதேபோல் சூர்யா – சுதா கொங்கரா இயக்கத்தில் சூரரைப் போற்று படத்தில் நடித்து வந்தார்.

இதையடுத்து சூர்யாவின் 39-வது படத்தை இயக்குநர் ஹரி இயக்க இருப்பதாகவும், இத்திரைப்படத்துக்கு அருவா என்று டைட்டில் வைத்திருப்பதாகவும் கடந்த மார்ச் மாதத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.

சூர்யா – இயக்குநர் ஹரி இணையும் 6-வது படமாக அருவா உருவாக இருக்கும் நிலையில், இத்திரைப்படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக நடிகை ராஷிகண்ணா நடிக்க இருப்பது உறுதியாகியுள்ளது.

ட்விட்டரில் #askraashi என்ற ஹேஷ்டேக்கில் ரசிகர்கள் கேட்ட பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்த ராஷிகண்ணா, அரண்மனை 3 மற்றும் சூர்யா – இயக்குநர் ஹரி கூட்டணியில் தான் நடிக்க இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

இந்தப் படத்தின் மூலம் இசையமைப்பாளர் டி.இமான், சூர்யாவுடனும், ஹரியுடனும் முதல்முறையாக இணைகிறார்.

ஏப்ரல் மாதம் படப்பிடிப்பு தொடங்கி ஒரேகட்டமாக படப்பிடிப்பை முடித்து 2020-ம் ஆண்டு தீபாவளிக்கு வெளியிட படக்குழு திட்டமிட்டிருந்த நிலையில் கொரோனா ஊரடங்கு காரணமாக படப்பிடிப்பு தள்ளிப் போயுள்ளது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே