ரஜினியின் உடல்நிலை சீராக உள்ளது – மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை..!!

ரஜினிகாந்த் உடல்நிலை சீராக உள்ளது. ரத்த அழுத்தத்திற்கான மருந்துவகள் தொடர்ந்து அவருக்கு வழங்கப்பட்டு வருகின்றன என்று அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்திருக்கிறது.

மேலும், ரஜினிகாந்தின் உடல்நிலையினை மருத்துவர்கள் உன்னிப்பாக கவனித்து வருவதாகவும் அப்பல்லோ தெரிவித்துள்ளது.

இன்று காலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட ரஜினிக்கு கொரோனா இல்லை என்பது பரிசோதனையில் தெரியவந்தது.

இந்நிலையில், ஹைதராபாத் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள ரஜினிகாந்தின் உடல்நிலை சீராக உள்ளதாக மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் ரஜினி ரத்தத்தை சீராக வைத்திருக்க சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும், நாளையும் பரிசோதனை மேற்கொள்ள உள்ளதால் ரஜினி இன்று மருத்துவமனையில் தங்கி இருப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரஜினியுடன் அவரது மகள் ஐஸ்வர்யா தனுஷ் இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே